மூக்கைப் பிள்ளை வீட்டு விருந்து சிறுகதை

மூக்கைப் பிள்ளை வீட்டு விருந்து சிறுகதை.



 ரவர சில சுகவாசிகள் இதையெல்லாம் ஒழுங்காகச் செய்வதில்லை. சும்மா தலையைக் காட்டி விட்டுத் திரும்பி விடுவார்கள். மூக்கப்பிள்ளையின் வழக்கமும் அதுதான்.


ஆனால் ‘ஊர் வழக்கம்’ ஒன்றை அவர் தட்ட முடியாமல் போயிருந்தது. ஒரு வீட்டில் கல்யாணம் நடந்தால் பல தினங்களுக்குப் பிறகு ‘நல்ல மாசத்துப் பழம்’ என்று வாழைப் பழங்களும் சிறிது சீனியும் ஊர் பூராவுக்கும் வழங்குவார்கள். “மறு வீடு வீட்டுப் பலகாரம்” என்று மைசூர் பாகு, லட்டு மற்றும் சில இனிப்புத் தினுசுகள், முறுக்கு, மிக்ஸர் எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் வைத்து சொந்தக்காரங்களுக்கு (சொக்காரங்களுக்கு) வழங்குவர். இது “ஊர் வழக்கம்” ஆகும்.


பெரியவர் யாராவது இறந்து போனால். மகன் அல்லது பேத்தி ஊருக்கு ‘கடலை போடுவது’ வழக்கம். அரைப்படி கடலை – வசதி மிகுந்தவர்கள், 1 படி கடலை கூட – ‘ஊர் வழக்கம்’ ஆக உறவுக்காரர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைப்பார்கள்.


அநேகமாக எல்லா வீட்டாரும் இம்மாதிரி ‘ஊர் வழக்கங்களைத் தட்டாமல் வாங்கிக் கொள்வார்கள், ஒன்றிரண்டு பேர்தான்,’ நாங்கள் என்னத்தைத் திரும்பச் செய்யப் போகிறோம் எங்களுக்கு ஊர் வழக்கம் வேண்டாம்’ என்று மறுத்து விடுவார்கள்.


மூக்கப்பிள்ளை ஒன்றிரு தடவைகள் மறுத்துப் பார்த்தார். ‘வழக்கம்’ கொண்டு வருகிற பெண்கள். “சும்மா வாங்கித்தின்னு வையிங்க, ஊர் வழக்கத்தை விடுவானேன்?” என்று கொண்டு வந்ததை அவர் வீட்டிலேயே வைத்துவிட்டுப் போனார்கள். அதன் பிறகு அவர் மறுத்ததில்லை, சடங்கு வீடுகளிருந்து ‘சர்க்கரைப் பொங்கல்’ (பாச்சோறு) வரும், கோயில் திருவிழாக்காலங்களில் புளியோதரை. பருப்புப் பொங்கல். சர்க்கரைப் பொங்கல். சுண்டல் பிரசாதம் வரும். கல்யாண வீட்டுப் பணியாரங்கள் வரும்.


“சும்மா சாப்பிட்டு வையிங்க’ என்று பெண்கள் தாராளமாகக்

கொடுத்து விட்டுப்போனார்கள்,


இதை எல்லாம் வாங்குறமே நாம ஊராருக்கும் உறவுகாரங்களுக்கும் திருப்பிச் செய்ய சந்தர்ப்பம் வரவா போகுது? என்று அவர் மனம் ஆதியில் குறுகுறுத்தது. ‘இதுக்காகவே. வசை இருக்கப்படாதுன்னே. நான் விசேஷ வீடுகளில் சாப்பிடுகிறது இல்லை, நம்ம வீட்டிலே என்ன

விசேஷம் வரப்போகுது, நாம ஊர் கூட்டிச் சாப்பாடு போடப்போறோம்’ என்று அவர் எண்ணினார்.


ஆனாலும் போகப் போக அவருடைய மனமும் ஆட்சேபிக்கவில்லை. மூக்கப்பிள்ளையும் ‘ஊர் வழக்கங்களை வாங்கி அனுபவித்துக் கொண்டிருந்தார்.


இப்போது அவருடைய மனசாட்சி உதைத்துக் கொண்டது, தொந்தரவு கொடுத்தது.


முந்திய தினம் ஒரு வழக்கம் வந்தது, வசதியான வீடு, ‘மறுவீடு வீட்டுப் பலகாரம்’ என்று நிறையவே கொடுத்து அனுப்பியிருந்தார்கள். இனிப்புகளும் காரங்களுமாய் வகை வகையான தின்பண்டங்கள்.


‘எனக்கு வேண்டாம்; இனிமே நான் ஊர் வழக்கத்தை வாங்கப் போறதில்லே’ என்று அறிவித்தார் மூக்கப்பிள்ளை.


‘இதென்ன புது வழக்கம்? எப்பவும் போலே வாங்கி வையுங்க, பலகாரமெல்லாம் தினுசு தினுசாயிருக்கு; சும்மா சாப்பிடுங்க, நான் வேணும்னா காப்பி போட்டுத் தரட்டுமா?’ என்றாள் அதைக் கொண்டு வந்தவள். அவள் கொஞ்சம் வாயாடி.


அங்கே அப்படி, இங்கே இப்படி என்று வாயடி அடித்து, கொண்டு வந்ததை அவருக்கே விட்டு விட்டுப் போனாள்.


அதுமுதல் அவர் மனம் அரித்துக் கொண்டேயிருந்தது.


இதெல்லாம் ‘வட்டி இல்லாக் கடன்’ என்பாக. இப்ப ஒருத்தர் செய்தா, மற்றவர் பிறகு எப்பவாவது திரும்பச் செய்யணும். அவர் இல்லாவிட்டாலும், அவர் பேரைச் சொல் அவருடைய மகனோ மகளோ பேரப்பிள்ளைகளோ செய்வாங்க. எதுவுமே செய்யாத என் போன்றவர்கள் – நானாக எதுவும் ஊருக்குச் செய்யப் போவதில்லை. எனக்குப் பிறகு என் பேராலே செய்றதுக்கும் யாருமில்லை. அப்படி இருக்கையிலே ஊர் வழக்கங்களை வாங்கி அனுபவிப்பது எப்படி நியாயம் ஆகும்?…


ஒருத்தர் இல்லாவிட்டால் இன்னொருவர் எப்பவாவது பழிச்சொல் உதிர்ப்பாங்க. பொம்பிளைகள் சில சமயம் வசையாப் பேசுறதும் வழக்கமாகத்தானே இருக்கு – நாங்க அதைச் செய்தோம், இதைச் செய்தோம் ஊர்க்காரங்க வயணமா வாங்கிச் சாப்பிட்டாங்க. இந்த ஊரு எங்களுக்கு என்ன செஞ்சுதுயின்னு நீட்டி முழக்குவாங்க…


சிலபேரைப் பற்றிச் சில சமயங்களில் அநேகர் பேசுவது உண்டே! ஊர் சாப்பாடுன்னு சொன்னா பந்திக்கு முந்தி வந்திருவான். வாய்க்கு ருசியா வழிச்சு வழிச்சுத் தின்பான். ஒரு கல்யாண வீடு கருமாதி வீடு எதையும் விட்டுவிடமாட்டான். அவன் வீட்டிலே இதுவரைக்கும் எந்த விசேஷமும் செய்ததில்லை. யாருக்கும் சாப்பாடு போட்டதில்லே. என்னத்தைச் செய்யப்போறான்? அப்படியே செய்தாலும், ரொம்பச் சுருக்கமாச் செய்து ஊர்ச்சாப்பாடு போடாம ஒப்பேத்திடுவான்.


இப்படி நினைக்க நினைக்க மூக்கப்பிள்ளையின் மனம் சங்கடப்படலாயிற்று.

கூப்பிட்டு சிவபுரம் சுகவாசிகள் எல்லோர் வீட்டுக்கும்போய் “சித்திரா பௌர்ணமி சித்திரான்னச் சிறப்புச் சாப்பாடு” பற்றிச் சொல்லி அழைக்கும்படி ஏற்பாடு.


வீட்டில் விளக்குகளை ஏற்றி வைத்துக்கொண்டு இலைகளை ரெடி பண்ணி வைக்கச் சொன்னார், ஆட்கள் ஏழுமணி முதல் தயாராக இருந்தார்கள்.


ஆனால். அழைக்கப்பட்ட நபர்களில் ஒருவர் கூட வரவில்லை.


மணி எட்டு….. எட்டரை….. ஒன்பது என்று ஓடியது. ஊகூம் ஒரு ஆளைக் கூடக் காணோம்.


மூக்கப்பிள்ளை மனம் குமுறிக் கொண்டிருந்தது. அவர் முகம் ‘என்னமோ மாதிரி’ மாறிவிட்டது. வீட்டில் அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்தார்.


ஒன்பதே கால்…..


திரும்பவும் ஆறுமுகத்தை அனுப்பி வைத்தார்.


சுகவாசிகள் மிகுந்த சிவபுரத்தில் விசேஷமான பழக்க வழக்கங்கள், கட்டுப்பாடுகள், எத்தனையோ உண்டு. ஒரு வீட்டில் விசேஷம், விருந்து என்றால் ஊரார் எதிர் பார்க்கிற சம்பிரதாயங்கள் பலவாகும்.


முதல் விசேஷ வீட்டுக்காரரே நேரில் ஒவ்வொருவரையும் கண்டு விஷயத்தைச் சொல்அழைக்கவேண்டும். “சாப்பாட்டையும் நம்ம வீட்டிலேயே வச்சுக்கிடுங்க” என்று வற்புறுத்தவேண்டும். விசேஷ நாளுக்கு முதல் நாள் அழைப்புக்காரன் வீடு வீடாகப் போய், ‘நாளைக்கு இன்னார்’ வீட்டு விசேஷம் – தாம்பூலத்துக்கும் சாப்பாட்டுக்கும்

அழைச்சிருக்கு’ என்று சொல்ப் போக வேண்டும். அப்புறம் விசேஷத்தன்று சாப்பாட்டு நேரத்தில் “ஐயா, சாப்பாட்டுக்கு வாங்க. இலை போட்டாச்சு’ என்று அறிவிக்க வேண்டும்.


சுகவாசி வருகிறாரோ வரவில்லையோ. அழைக்கத் தவறக்கூடாது. அழைப்பு விட்டுப் போனால் அதுபெரும் தவறாகக் கருதப்படும்.


ஊர் மரபு அப்படி இருக்கையில்.


இந்த மூக்கப்பிள்ளை என்ன நெனச்சுப்போட்டான்? பெரிய லார்டு ரிப்பன் பேரனோ? வீட்டில் இருந்துகிட்டு ஆள் மூலம் சொல்லி அனுப்புவானாம் நாம் ஓடிப்போகணுமாம் சாப்பிடறதுக்கு! நாம என்ன சோத்துக்கு அலைந்து போயா கிடக்கிறோம்? என்று கொதிப்புற்றனர் சிலர்.


‘இந்த மூக்கப்பிள்ளை புத்தி போனதைத்தான் பாரேன். சித்ரா பௌர்ணமி-நயினார் நோன்பு – வருஷத்திலே ஒரு நாள் விரதம் ஆச்சே? இட்லி உப்புமா இப்படிச் சாப்பிடுவாங்களா? சோறு வகைகளைத் தின்னப் போவாங்களா?” என்றனர் சில பேர்.


‘அவன் யார் வீட்டு விருந்துக்கு வந்தான். நாம அவன் அழைச்ச உடனே அவன் வீட்டுக்குப் போகணும் என்பதுக்கு? என்று கேட்டார்கள் பலர்.


ஆறுமுகம் இதை எல்லாம் மூக்கப்பிள்ளையிடம் ரிப்போர்ட் பண்ணினான்.


தவசிப் பிள்ளைகளும் பரிமாறரெடியாக நின்றவர்களும் பிள்ளையையும் சித்திரான்ன வகைகளையும் மாறி மாறிப் பார்த்தார்கள். இவ்வளவு ஏற்பாடுகளும் வீணாச்சுதே என்ற மனச்சுமை அவர்களுக்கு.


மூக்கப்பிள்ளை தொண்டையைச் செருமினார். ஆறுமுகம் என்றார்.


“ஐயா!’ என்றான் அவன் பணிவோடு.


‘உனக்கு அழைப்புக் கூலி ரெண்டு ரூபாயா? ரெண்டு தரம் அழைச்சிருக்கே நாலு ரூபாயாச்சு. இன்னும் ரெண்டு ரூபா வாங்கிக்கோ. இந்த ஊர் பெரியவாள்களும் பிரமுகர்களும் தானே

நம்ம வீட்டு விருந்துக்கு வரமாட்டோம்னு சொல்ப் போட்டாக! போகட்டும், நீ வடக்கூர், கீழுர் பக்கம் போயி, அங்கே உள்ள ஏழை எளிய பிள்ளைகளை எல்லாம் இங்கே வரச்சொல்லு. ஐயா வீட்டிலே நயினார் நோன்பு பூசை. சித்திரான்ன பிரசாதம்னு சொல்லி அனுப்பு. வருஷத்திலே ஒரு நாள்! அதுக புதுமையா, திருப்தியாச் சாப்பிடட்டும்… நீயும் வயிறாரச் சாப்பிடு. நீ சாப்பிட்ட பிறகு போனாப் போதும், வே, இலையைப் போடும். எனக்குப் பரிமாறும்! திண்ணையிலே இலை போட்டு ஆறுமுகத்துக்கும் பரிமாறும் என்று மிடுக்காக உத்திரவிட்டார்.


‘செய்தது எதுவும் வீணாகி விடாது!’ என்றார் அவர். தவசிப் பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்வது போல.


இருக்கிறசுகவாசிகளுக்கே மேலும் மேலும் விருந்தளிப்பதை விட, ஏழை எளியதுக வயிற்றுக்குச் சோறு போடுவது ரொம்பப் பெரிய விஷயமாக்கும்!


இப்படிப் பொன்மொழி தீட்டிக் கொண்டது மூக்கப்பிள்ளை மனம்.



Tags - வல்லிக்கண்ணன் கதைகள், தமிழ் கதைகள், நன்னெறி கதைகள், சிறுகதைகள் ,மூக்கைப் பிள்ளை வீட்டு விருந்து சிறுகதை.

Comments

❤️பின் தொடரும் நட்புறவுகள்

#tamilstories #tamil #tamilstorytelling #tamilsurvivalstories #tamilstory #tamilnovel #tamilshortstories #ponniyinselvan #ponniyinselvanlovers #vanthiyadevan #ponniyinselvanmemes #adityakarikalan #kannadasan #balakumaran #sirukathai #tamilstoryteller #tamilbooks #namuthukumar #story #tamilbooklovers #tamilovebgm #tamilpoetry #tamilstories #maan #tamilquotes #tamilmotivation #wattpadstories #gurmeetchoudhary #tamilkavithai #hotnessoverload #geet #romanticcouple #tamilpoetry #kavithai #maaneet #kavithaigal #tamilpoem #maansinghkhurana #tamilromance #hottestcouple #officeromance #tamilwriters #gurti #bedtimestories #kadhaigal #tamilquotes #love #bookstamil #ps #lovestatustamil #lovestory #tamilmemes #writeraswin #tamillove #samantha #tamilbookmemes #skids #goundamani #moralstories #tamilmotivation #tamilstatus #wattpadstories #tamilromance #geethanda #tamilstories #romance #story #chennai #lovestory #stories #srilanka #tamil #wattpad #tamilstatus #storytime #tamilsongs #tamillove #tamillyrics #bestcouple #maan #tamilquotes #tamilmotivation #wattpadstories #gurmeetchoudhary #tamilkavithai #maaneetians #ghsp #ponniyinselvanbook #tamilkavithai #tamilwriters #tamilcartoon #tamilstorybooks #storiesforkids #wattpad #tamilliterature #geetmaansinghkhurana #tamilbookstagram #tamilwriter #tenali #aswintamilstories #shortstory #sivagamiyinsabadham tamil short stories tamil stories tamil kathai tamil short story tamil kadhaigal tamil blog stories motivational tamil stories inspirational tamil stories moral stories in tamil life stories in tamil. love stories in tamil friendship stories in tamil family stories in tamil village stories in tamil best tamil short stories real life tamil stories.emotional tamil stories,heart touching tamil stories meaningful tamil stories small stories in tamil tamil blog tamil literature tamil writing tamil content tamil readers tamil storytelling. தமிழ் சிறுகதை,தமிழ் கதைகள்,சிறுகதைகள் ,வாழ்க்கை கதைகள் உந்துதல் கதைகள்.