செவ்வாழை சிறுகதை - அறிஞர் அண்ணா

 

செவ்வாழை சிறுகதை 

அறிஞர் அண்ணா






செங்கோடன், அந்தச் செவ்வாழைக் கன்றைத் தன் செல்லப் பிள்ளைபோல் வளர்த்து வந்தான். இருட்டுகிற நேரம் வீடு திரும்பினாலும்கூட, வயலிலே அவன்பட்ட கஷ்டத்தைக்கூடப் பொருட்படுத்தாமல், கொல்லைப்புறம் சென்று, செவ்வாழைக் கன்றைப் பார்த்துவிட்டு, தண்ணீர் போதுமானபடி பாய்ச்சப்பட்டிருக்கிறதா என்று கவனித்து விட்டுத்தான், தன் நான்கு குழந்தைகளிடமும் பேசுவான். அவ்வளவு பிரேமையுடன் அந்தச் செவ்வாழையை அவன் வளர்த்து வந்தான். கன்று வளர வளர அவன் களிப்பும் வளர்ந்தது. செவ்வாழைக்கு நீர் பாய்ச்சும் போதும், கல் மண்ணைக் கிளறிவிடும்போதும், அவன் கண்கள் பூரிப்படையும் மகிழ்ச்சியால், கரியனிடம் -அவனுடைய முதல் பையன், காட்டியதைவிட அதிகமான அன்பும், அக்கரையும் காட்டு கிறாரே என்று ஆச்சரியம், சற்றுப் பொறாமைகூட ஏற்பட்டது, குப்பிக்கு.


''குப்பி! ஏதாச்சும் மாடுகீடு வந்து வாழையை மிதிச்சிடப் போகுது, ஜாக்ரதையாக் கவனிச்சுக்கோ. அருமையான கன்று-ஆமாம், செவ்வாழைன்னா சாமான்யமில்லே. குலை, எம்மாம் பெரிசா இருக்கும் தெரியுமோ? பழம், வீச்சு வீச்சாகவும் இருக்கும். உருண்டையாகவும் இருக்கும்--- ரொம்ப ருசி--- பழத்தைக் கண்ணாலே பார்த்தாக்கூடப் போதும்; பசியாறிப் போகும்'' என்று குப்பியிடம் பெருமை யாகப் பேசுவான் செங்கோடன்.

அப்பா சொல்லுவதை நாலு பிள்ளைகளும் ஆமோதிப் பார்கள்--- அதுமட்டுமா-பக்கத்துக் குடிசை, எதிர்க் குடிசைகளிலே உள்ள குழந்தைகளிடமெல்லாம், இதே பெருமை யைத்தான் பேசிக் கொள்வார்கள். உழவர் வீட்டுப் பிள்ளைகள், வேறே எதைப் பற்றிப் பேசிக் கொள்ள முடியும்.  அப்பா வாங்கிய புதிய மோட்டாரைப் பற்றியா, அம்மாவின் வைரத்தோடு பற்றியா, அண்ணன் வாங்கிவந்த ரேடியோவைப் பற்றியா, எதைப் பற்றிப் பேசமுடியும்? செவ்வாழைக் கன்றுதான், அவர்களுக்கு, மோட்டார், ரேடியோ, வைர மாலை, சகலமும்!

மூத்த பயல் கரியன்', 'செவ்வாழைக் குலை தள்ளியதும், ஒரு சீப்புப் பழம் எனக்குத்தான்' என்று சொல்லுவான்".

''ஒண்ணுக்கூட எனக்குத் தர மாட்டாயாடா-நான் உனக்கு மாம்பழம் தந்திருக்கிறேன்? கவனமிருக்கட்டும். வறுத்த வேர்க்கடலை கொடுத்திருக்கிறேன்; கவனமிருக்கட் டும்" --என்று எதிர்க் குடிசை எல்லப்பன் கூறுவான்...

கரியனின் தங்கை, காமாட்சியோ, கண்ணைச் சிமிட்டிக் கொண்டே ''உனக்கு ஒரு சீப்புன்னா, எனக்கு இரண்டு தெரியுமா? அம்மாவைக் கேட்டு ஒரு சீப்பு, அப்பாவைக் கேட்டு ஒரு சீப்பு'' என்று குறும்பாகப் பேசுவாள்.

மூன்றாவது பையன் முத்து, ''சீப்புக் கணக்குப் போட்டுக்கிட்டு ஏமாந்து போகாதிங்க.  ஆமா-பழமாவதற்குள்ளே யாரார் என்னென்ன செய்துவிடுவாங்களோ, யாரு கண்டாங்க'' என்று சொல்லுவான்-வெறும் வேடிக்கைக் காக அல்ல--திருடியாவது மற்றவர்களைவிட அதிகப்படியான பழங்களைத் தின்றே தீர்த்து விடுவது என்று தீர்மானித்தே விட்டான்.

செங்கோடனின் செல்லப் பிள்ளையாக வளர்ந்து வந்தது செவ்வாழை, உழைப்பு அதிகம் வயலில். பண்ணை மானேஜரின் ஆர்ப்பாட்டம் அதிகம். இவ்வளவையும் சகித்துக் கொள்வான்- செவ்வாழையைக் கண்டதும் சகலமும் மறந்து போகும். குழந்தைகள் அழுதால், செவ்வாழையைக் காட்டித்தான் சமாதானப்படுத்துவான்! துஷ்டத்தனம் செய்கிற குழந்தையை மிரட்டவும், செவ்வாழையைத்தான் கவனப்படுத்துவான்! குழந்தைகள் பிரியமாகச் சாப்பிடுவார்கள், செவ்வாழையை என்ற எண்ணம் செங்கோடனுக்கு. பண்ணை வீட்டுப் பிள்ளைகள் ஆப்பிள், திராட்சை தின்ன முடிகிறது--கரியனும் முத்துவும், எப்படி விலை உயர்ந்த அந்தப் பழங்களைப் பெற முடியும்? செவ்வாழையைத் தந்து தன் குழந்தைகளைக் குதூகலிக்கச் செய்ய வேண்டும் என்ற எண்ணந்தான், செங்கோடனை, அந்தச் செவ்வாழைக் கன்றைச் செல்லமாக வளர்க்கும்படிச் செய்தது. உழவன் செங்கோடனிடம், எவ்வளவு பாடு பட்டாலும், குழந்தைகளுக்குப் பழமும் பட்சணமும் வாங்கித் தரக்கூடிய 'பணம்' எப்படிச் சேர முடியும்? கூலி நெல், பாதி வயிற்றை நிரப்பவே உதவும்-குப்பியின் 'பாடு' குடும்பத்தின் பசியைப் போக்கக் கொஞ்சம் உதவும். இப்படிப் பிழைப்பு! பலனில் மிகப்பெரும் பகுதியோ, பண்ணைக்குச் சேர்ந்துவிடுகிறது. இந்தச் 'செவ்வாழை' ஒன்றுதான் அவன் சொந்தமாக மொத்தமாக பலன் பெறுவதற்கு உதவக்கூடிய, உழைப்பு! இதிலே பங்கு பெற, பண்ணையார் குறுக்கிட முடியாதல்லவா? அவருக்காகப் பாடுபட்ட நேரம் போக, மிச்சமிருப்பதிலே, அலுத்துப் படுக்க வேண்டிய நேரத்திலே பாடுபட்டு, கண்ணைப் போல வளர்த்துவரும், செவ்வாழை! இதன் முழுப் பயனும் தன் குடும்பத்துக்கு! இது ஒன்றிலாவது தான் பட்டபாட்டுக்கு உரிய பலனைத் தானே பெற முடிகிறதே என்ற சந் தோஷம் செங்கோடனுக்கு.

இவ்வளவும் அவன் மனதிலே, தெளிவாகத் தோன்றிய கருத்துக்கள் அல்ல, புகைப்படலம் போல், அந்த எண்ணம் தோன்றும், மறையும்-செவ்வாழையைப் பார்க்கும்போது பூரிப்புடன் பெருமையும் அவன் அடைந்ததற்குக் காரணம் இந்த எண்ணந்தான்.

கன்று வளர்ந்தது கள்ளங் கபடமின்றி. செங்கோட னுக்குக் களிப்பும் வளர்ந்தது. செங்கோடனின் குழந்தைகளுக்கு இப்போது, விளையாட்டு இடமே, செவ்வாழை இருந்த இடந்தான்! மலரிடம் மங்கையருக்கும், தேனிடம் வண்டுகளுக்கும் ஏற்படும் பிரேமைபோல், அந்தக் குழந்தைகளுக்குச் செவ்வாழையிடம் பாசம் ஏற்பட்டுவிட்டது .

''இன்னும் ஒரு மாசத்திலே குலை தள்ளுமாப்பா?' கரியன் கேட்பான், ஆவலுடன், செங்கோடனை'.

''இரண்டு மாசமாகும்டா கண்ணு'' என்று செங்கோடன் பதிலளிப்பான்.

செவ்வாழை குலை தள்ளிற்று -- செங்கோடனின நடையிலேயே ஒரு புது முறுக்கு ஏற்பட்டுவிட்டது. நிமிர்த்து பார்ப்பான், குலையை, பெருமையுடன்.

பண்ணை பரந்தாம முதலியார், தமது மருமகப் பெண் முத்து விஜயாவின் பொன்னிற மேனியை அழகுபடுத்திய வைர மாலையைக்கூட அவ்வளவு பெருமையுடன் பார்த்திருக்கமாட்டார்! செங்கோடனின் கண்களுக்கு, அந்தச் செவ்வாழைக் குலை, முத்துவிஜயாவின வைரமாலையைவிட விலைமதிப்புள்ளதாகத்தான் தோன்றிற்று. குலை முற்ற முற்ற, செங்கோடனின குழந்தைகளின் ஆவலும், சச்சரவும், பங்குத் தகராறும், அப்பாவிடமோ அம்மாவிடமோ 'அப்பீல்' செய்வதும் ஓங்கி வளரலாயிற்று. ''எப்போது பழமாகும்?'' என்று கேட்பாள் பெண். 'எத்தனை நாளைக்கு மரததிலேயே இருப்பது?' என்று கேட்பான் பையன். செங்கோடன்  பக்குவமறிந்து குலையை வெட்டி, பதமாகப் பழுக்க வைத்துப் பிள்ளைகளுக்குத் தர வேண்டுமென்று எண்ணிக் கொண்டிருந்தான். உழைப்பின் விளைவு! முழுப் பலனை நாம் பெறப் போகிறோம்---இடையே தரகர் இல்லை-முக்காலே மூன்று வீசம் பாகத்தைப் பறித்துக் கொள்ளும் முதலாளி இல்லை . உழைப்பு நம்முடையது என்றாலும் உடைமை பண்ணையாருடையது---அவர் எடுத்துக் கொண்டது போக மீதம்தானே தனக்கு என்று, வயலில் விளையும் செந்நெல்லைப் பற்றி எண்ண வேண்டும்---அதுதானே முறை! ஆனால் இந்தச் செவ்வாழை அப்படி அல்ல! உழைப்பும் உடைமையும் செங்கோடனுக்கே சொந்தம்.

இரண்டு நாளையில், குலையை வெட்டிவிடத் தீர்மானித்தான்--- பிள்ளைகள் துள்ளின சந்தோஷத்தால், மற்ற உழவர் வீட்டுப் பிள்ளைகளிடம் 'சேதி' பறந்தது---பழம் தரவேண்டும் என்று சொல்லி, அவலோ, கடலையோ, கிழங்கோ, மாம்பிஞ்சோ, எதை எதையோ, 'அச்சாரம்' கொடுத்தனர் பல குழந்தைகள், கரியனிடம்.

பாடுபட்டோம், பலனைப் பெறப் போகிறோம், இதிலே ஏற்படுகிற மகிழ்ச்சிக்கு ஈடு எதுவும் இல்லை . இதைப் போலவே, வயலிலும் நாம் பாடுபடுவது நமக்கு முழுப்பயன் அளிப்பதாக இருந்தால் எவ்வளவு இன்பமாக இருக்கும்! செவ்வாழைக்காக நாம் செலவிட்ட உழைப்பு, பண்ணையாரின் நிலத்துக்காகச் செலவிட்ட உழைப்பிலே, நூற்றுக்கு ஒரு பாகம்கூட இராது---ஆனால் உழைப்பு நம்முடைய தாகவும் வயல் அவருடைய உடைமையாகவும் இருந்ததால் பலனை அவர் அனுபவிக்கிறார் பெரும் பகுதி. இதோ, இந்தச் செவ்வாழை நம்ம கொல்லையிலே நாம் உழைத்து வளர்த்தது---எனவே பலன் நமக்குக் கிடைக்கிறது---இதுபோல, நாம் உழைத்துப் பிழைக்க நம்முடையது என்று ஒரு துண்டு வயல் இருந்தால், எவ்வளவு இன்பமாக இருக்கும். அப்படி ஒரு காலம் வருமா! உழைப்பவனுக்குத்தான் நிலம் சொந்தம். பாடுபடாதவன் பண்ணையாராக இருக்கக் கூடாது என்று சொல்லும் காலம் எப்போதாவது வருமா என்றெல்லாம் கூட, இலேசாகச் செங்கோடன் எண்ணத் தொடங்கினான். செவ்வாழை இது போன்ற சித்தாந்தங்களைக் கிளறிவிட்டது அவன் மனதில், குழந்தைகளுக்கோ நாக்கிலே நீர் ஊறலாயிற்று .

செங்கோடன் செவ்வாழைக் குலையைக் கண்டு களித்திருந்த சமயம், பண்ணை பரந்தாமர், தமது மருமகப் பெண் முத்து விஜயத்தின் பிறந்தநாள் விழாவை விமரிசையாகக் கொண்டாட ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தார். அம்பிகை கோயிலில் அபிஷேக ஆராதனை செய்வதற்காக, 'ஐயரிடம்' சொல்லிவிட்டார். கணக்கப் பிள்ளையைக் கூப்பிட்டு, 'பட்டி,' தயாரிக்கச் சொன்னார். பல பண்டங்களைப் பற்றிக் குறிப்பு எழுதும்போது, 'பழம்' தேவை என்று தோன்றாமலிருக்குமா? 'இரண்டு சீப்பு வாழைப்பழம்' என்றார் பண்ணையார்.

"ஏனுங்க பழம்-கடையிலே நல்ல பழமே இல்லை---பச்சை நாடாத்தான் இருக்கு" என்று இழுத்தான் சுந்தரம், கணக்கப்பிள்ளை.

''சரிடா, அதிலேதான் இரண்டு சீப்பு வாங்கேன்?-- வேறே நல்ல பழமா எங்கே இருக்கு!'' என்று பண்ணையார் சொல்லி முடிப்பதற்குள், சுந்தரம், ''நம்ம செங்கோடன் கொல்லையிலே, தரமா, ஒரு செவ்வாழைக் குலை இருக்குதுங்க அதைக் கொண்டுகிட்டு வரலாம்'' என்றான் . 'சரி' என்றார் பண்ணையார்.

செங்கோடனின் செவ்வாழைக்குலை! அவனுடைய இன்பக் கனவு!! உழைப்பின் விளைவு!! குழந்தைகளின் குதூகலம்!!
அதற்கு மரண ஓலை தயாரித்துவிட்டான் சுந்தரம்!

எத்தனையோ பகல் பார்த்துப் பார்த்து, செங்கோடனின் குடும்பம் பூராவும் பூரித்தது அந்தக் குலையை! அதற்குக் கொலைகாரனானான் சுந்தரம். மகிழ்ச்சி, பெருமை, நம் பிக்கை இவைகளைத் தந்து வந்த, அந்தச் செவ்வாழைக் குலைக்கு வந்தது ஆபத்து.

தெருவிலே, சுந்தரமும் செங்கோடனும் பேசும்போது குழந்தைகள், செவ்வாழையைப் பற்றியதாக இருக்கும் என்று எண்ணவே இல்லை! செங்கோடனுக்குத் தலை கிறுகிறுவென்று சுற்றிற்று-நாக்குக் குழறிற்று---வார்த்தைகள் குபுகுபுவென்று கிளம்பி, தொண்டையில் சிக்கிக் கொண்டன.

மாட்டுப் பெண்ணுக்கு பிறந்த நாள் பூஜை---என்று காரணம் காட்டினான் சுந்தரம். என்ன செய்வான் செங்கோடன்! என்ன சொல்வான்? அவன் உள்ளத்திலே, வாழையோடு சேர்ந்து வளர்ந்த ஆசை---அவன் குழந்தைகளின் நாக்கில் நீர் ஊறச் செய்த ஆசை---இன்று, நாளை, என்று நாள் பார்த்துக் கொண்டிருந்த ஆவல்---எனும் எதைத்தான் சொல்ல முடியும்? கேட்பவர் பண்ணை பரந்தாமர்! எவ்வளவு அல்பனடா, வாழைக் குலையை அவர் வாய் திறந்து, உன்னை ஒரு பொருட்டாக மதித்துக் கேட்டனுப்பினால் முடியாது என்று சொல்லிவிட்டாயே! அவருடைய உப்பைத் தின்று பிழைக்கிறவனுக்கு, இவ்வளவு நன்றி கெட்டதனமா? கேவலம், ஒரு வாழைக் குலை! அவருடைய அந்தஸ்துக்கு, இது ஒரு பிரமாதமா!-என்று ஊர் ஏசுகிறது போல், அவன் கண்களுக்குத் தெரிகிறது.

'அப்பா! ஆசை காட்டி மோசம் செய்யாதே! நான் கூடத்தான் தண்ணீர் பாய்ச்சினேன்-மாடு மிதித்துவிடாத படி பாதுகாத்தேன்-செவ்வாழை ரொம்ப ருசியாக இருக்கும். கல்கண்டுபோல இருக்கும் என்று நீதானே என்னிடம் சொன்னாய், அப்பா! தங்கச்சிக்குக்கூட, 'உசிர்' அந்தப் பழத்திடம். மரத்தை அண்ணாந்து பார்க்கும்போதே, நாக்கிலே நீர் ஊறும். எங்களுக்குத் தருவதாகச் சொல்லிவிட்டு, இப்பொழுது ஏமாற்றுகிறாயே.  நாங்கள் என்னப்பா, உன்னை கடையிலே காசு போட்டுத் திராட்சை, கமலாவா வாங்கித் தரச் சொன்னோம். நம்ம கொல்லையிலே நாம் வளர்த்த தல்லவா!' என்று அழுகுரலுடன் கேட்கும் குழந்தைகளும், 'குழந்தைகளைத் தவிக்கச் செய்கிறாயே, நியாயமா?' என்று  கோபத்துடன் கேட்கும் மனைவியும், அவன் மனக் கண்களுக் குத் தெரிந்தனர்! எதிரே நின்றவரோ, பண்ணைக் கணக்கப்பிள்ளை ! அரிவாள் இருக்குமிடம் சென்றான், 'அப்பா, குலையை வெட்டப் போறாரு---செவ்வாழைக்குலை' என்று ஆனந்தக் கூச்சலிட்டுக் கொண்டு, குழந்தைகள் கூத்தாடின. செங்கோடனின் கண்களிலே நீர்த்துளிகள் கிளம்பின!  குலையை வெட்டினான்---உள்ளே கொண்டு வந்தான்---அரிவாளைக் கீழே போட்டான்---'குலையைக் கீழேவை அப்பா, தொட்டுப் பார்க்கலாம்' என்று குதித்தன குழந்தைகள், கரியனின் முதுகைத் தடவினான் செங்கோடன், ''கண்ணு! இந்தக் குலை,  நம்ம ஆண்டைக்கு வேணுமாம் கொண்டு போகிறேன்.  அழாதிங்க---இன்னும் ஒரு மாசத்திலே, பக்கத்துக் கண்ணு மரமாகிக் குலை தள்ளும். அது உங்களுக்குக் கட்டாயமாகக் கொடுத்து விடறேன்'' என்று கூறிக்கொண்டே, வீட்டை விட்டுக் கிளம்பினான், குழந்தையின் அழுகுரல், மனதைப் பிளப்பதற்குள்.

செங்கோடன் குடிசை அன்று பிணம் விழுந்த இடம் போலாயிற்று.  இரவு நெடுநேரத்திற்குப் பிறகுதான் செங்கோடனுக்குத் துணிவு பிறந்தது வீட்டுக்குவர! அழுது அலுத் துத் தூங்கிவிட்ட குழந்தைகளைப் பார்த்தான். அவன் கண்களிலே, குபுகுபுவெனக் கண்ணீர் கிளம்பிற்று. துடைத்துக் கொண்டு, படுத்துப் புரண்டான்-அவன் மனதிலே ஆயிரம் எண்ணங்கள், செவ்வாழையை, செல்லப் பிள்ளைபோல் வளர்த்து என்ன பலன்...!

அவருக்கு அது ஒரு பிரமாதமல்ல---ஆயிரம் குலைகளையும் அவர் நினைத்த மாத்திரத்தில் வாங்க முடியும்! ஆனால் செங்கோடனுக்கு...? அந்த ஒரு குலையைக் காண அவன் எவ்வளவு பாடுபட்டான்---எத்தனை இரவு அதைப் பற்றி இன்பமான கனவுகள்--- எத்தனை ஆயிரம் தடவை, குழந்தைகளுக்கு ஆசை காட்டியிருப்பான்! உழைப்பு எவ்வளவு! அக்கரை எத்துணை! எல்லாம் ஒரு நொடியில் அழிந்தன!

நாலு நாட்களுக்குப் பிறகு, வெள்ளித் தட்டிலே, ஒரு சீப்பு செவ்வாழைப் பழத்தை வைத்துக் கொண்டு, அன்ன நடை நடந்து அழகுமுத்து விஜயா, அம்பிகை ஆலயத்துக்குச் சென்றாள்.

நாலு நாட்கள் சமாதானம் சொல்லியும், குழந்தை களின் குமுறல் ஓயவில்லை . கரியன் ஓரே பிடிவாதம் செய்தான், ஒரு பழம் வேண்டுமென்று. குப்பி, பழங்கலத்திலிருந்து ஒரு காலணாவை எடுத்துக் கொடுத்தனுப்பினாள், பழம் வாங்கிக்கொள்ளச் சொல்லி. பறந்தோடினான் கரியன்.

கடையிலே செவ்வாழைச் சீப்பு, அழகாகத் தொங்கிக் கொண்டிருந்தது. கணக்கப்பிள்ளை, பண்ணை வீட்டிலே இருந்து நாலு சீப்பை முதலிலேயே தீர்த்துவிட்டான்---அவன் விற்றான் கடைக்காரனுக்கு---அதன் எதிரே  ஏக்கத் துடன் நின்றான் கரியன்! ''பழம், ஒரு அணாடா, பயலே--- காலணாவுக்குச் செவ்வாழை கிடைக்குமா --- போடா?'' என்று விரட்டினான், கடைக்காரன். கரியன் அறிவானா, பாபம், தன் கொல்லையிலே இருந்த செவ்வாழை, இப்போது கடையில் கொலுவீற்றிருக்கிறது என்ற விந்தையை! பாபம்! எத்தனையோ நாள், அந்தச் சிறுவன், தண்ணீர் பாய்ச்சினான், பழம் கிடைக்குமென்று! பழம் இருக்கிறது; கரியனுக்கு எட்டாத இடத்தில்! விசாரத்தோடு வீட்டிற்கு வந்தான்', வறுத்த கடலையை வாங்கிக் கொரித்துக் கொண்டே. செங்கோடன், கொல்லைப் புறத்திலிருந்து வெளியே வந்தான், வாழை மரத்துண்டுடன்.

"ஏம்பா! இதுவும் பண்ணை வீட்டுக்கா?'' என்று கேட்டான் கரியன்.

''இல்லேடா, கண்ணு! நம்ம பார்வதி பாட்டி செத்துப் போயிட்டா, அந்தப் பாடையிலே கட்ட'' என்றான் செங்கோடன்.

அலங்காரப் பாடையிலே, செவ்வாழையின் துண்டு! பாடையைச் சுற்றி அழுகுரல்! கரியனும், மற்றக் குழந்தைகளும், பின்பக்கம்.

கரியன் பெருமையாகப் பாடையைக் காட்டிச் சொன்னான். ''எங்க வீட்டுச் செவ்வாழைடா,'' என்று.

“எங்க கொல்லையிலே இருந்த செவ்வாழைக்குலை யைப் பண்ணை வீட்டுக்குக் கொடுத்து விட்டோம்---மரத்தை வெட்டி   பாடையிலே கட்டிவிட்டோம்'' என்றான் கரியன்.

பாபம், சிறுவன்தானே!! அவன் என்ன கண்டான், செங்கோடனின் செவ்வாழை, தொழிலாளர் உலகிலே சர்வ சாதாரணச் சம்பவம் என்பதை.

அறிஞர் அண்ணா அவர்கள் ஏழைகளின் துயர் குறித்து எழுதிய சிறந்த ஒரு சிறுகதைதான் "செவ்வாழை "எனும் சிறுகதை.
இன்றைய வாசிப்பில் – அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள்!
“இலக்­கி­யம் என்­னு­டைய பிரச்­சி­னை­யல்ல; வாழ்க்­கை­தான் என்­னு­டைய பிரச்­சினை. வாழ்க்­கை­யில் இன்­பத்­தைப் பெருக்க வேண்­டும். வேத­னை­யைக் குறைக்க வேண்­டும். இது­தான் என் இறுதி லட்­சி­யம். ஒரு தெளி­வான சமூ­கக் குறிக்­கோள் உள்ள எழுத்­தா­ளன் நான். இந்­தச் சமூக உற­வு­தான் என்னை எழு­த­வைக்­கி­றது.”
அண்­ணா­துரை
முதல் மற்­றும் இரண்­டாம் உல­கப் போரி­னால் ஏற்­பட்ட நன்­மை­க­ளில் ஒன்று,சிறு­கதை என்ற இலக்­கிய வடி­வம். நாவல் வடி­வத்­தைப் போலவே சிறு­கதை வடி­வ­மும், ஆங்­கில இலக்­கிய வாசிப்­பின் வழியே பெறப்­பட்­டது. தமி­ழில் இவ்­வ­டி­வத்­தின் முன்­னோ­டி­யாக வ.வெ.சு.ஐய­ரைக் குறிப்­பி­ட­லாம். அடுத்து பி.எஸ்.இரா­மையா, கு.ப.ராஜ­கோ­பா­லன், ந.பிச்­ச­மூர்த்தி, புது­மைப் பித்­தன், சி.சு.செல்­லப்பா, கா.சிவத்­தம்பி, இளங்­கோ­வன், சிதம்­பர சுப்­ர­ம­ணி­யன், பி.எம்.கண்­ணன், மௌனி போன்­ற­வர்­கள் சிறு­க­தை­களை மட்­டு­மல்ல; பரி­சோ­த­னை­யி­லான கதை­க­ளை­யும் எழு­தி­னார்­கள். இவர்­க­ளு­டைய வரி­சை­யில் கு.அழ­கி­ரி­சாமி, லா.ச.ராமா ­மிர்­தம், தி.ஜான­கி­ரா­மன், சுந்­தர ராம­சாமி போன்­ற­வர்­க­ளும் சிறு­கதை வடி­வத்­தைத் தமி­ழில் வளப்­ப­டுத்­தி­னார்­கள்.
இந்த எழுத்­தா­ளர்­கள், சிறு­கதை வடி­வத்­திற்கு, உள்­ள­டக்­கத்­திற்கு, மொழிக்கு, நடைக்கு, பரி­சோ­த­னைக்கு முன்­னு­ரிமை தந்து எழு­தி­ய­வர்­கள். இவர்­க­ளு­டைய கதை­க­ளில் தனி­ம­னித சிக்­கல், புலம்­பல், குழப்­பம், குடும்ப உற­வு­க­ளுக்­கி­டை­யி­லான மோதல்­களே அதி­கம் பேசு­பொ­ரு­ளாக இருந்­தன. ஒரு­வ­கை­யில் இவர்­கள் ஆச்­சா­ரத்­தைக்­க­டைப்­பி­டித்து மிக­வும் ஆச்­சா­ர­மான முறை­யில் எழு­தி­ய­வர்­கள் என­லாம். இவர்­கள் எழு­திய அதே கால­கட்­டத்­தில் தமி­ழ­கத்­தில் ஏற்­பட்ட அர­சி­யல்­மாற்­றங்­க­ளி­னால், சித்­தாந்­தங்­க­ளின் அடிப்­ப­டை­யில் இயக்­கங்­கள் உரு­வா­ன­தி­னால், இயக்­கங்­கள் உரு­வாக்­கிய புதிய கொள்­கை­க­ளின் அடிப்­ப­டை­யில் பல­ருக்கு எழு­த­வேண்­டிய நிர்­பந்­தம் ஏற்­பட்­டது. இந்­த­நிர்­பந்­தம் சமூ­கத்­தில் நில­விய மூடப்­ப­ழக்க வழக்­கங்­க­ளுக்கு எதி­ராக, பரம்­ப­ரைத் தொழில்­க­ளுக்கு எதி­ரா­கக் கருத்­துப் பிரச்­சா­ரம் செய்ய வேண்­டிய, கிட்­டத்­தட்­ட­க­ல­கம் செய்­ய­வேண்­டிய சூழல் இருந்­தது.
இந்­தச் சூழல் பல எழுத்­தா­ளர்­களை, சிந்­த­னை­யா­ளர் களை, போராட்­டக்­கா­ரர்­களை உரு­வாக்­கி­யது. இவர்­களை காலம் உரு­வாக்­கிய, சமூ­கம் உரு­வாக்­கிய எழுத்­தா­ளர்­கள் என்று சொல்­ல­லாம். இனம், மொழி பற்­று­டன், பழ­மைக்கு எதி­ரான குணம், அறி­யாமை, மடமை, மூடப்­ப­ழக்க வழக்­கங்­க­ளுக்கு எதி­ரான நிலைப்­பாட்­டு­டன் பலர் எழு­த­வந்­த­னர். அப்­ப­டி­வந்­த­வர்­க­ளில் முக்­கி­ய­மா­ன­ வ­ரா­க­வும், முதன்­மை­யா­ன­ வ­ரா­க­வும் பேரெ­ழுச்­சியை உரு­வாக்­கி­ய­வ­ரா­க­வும் இருந்­த­வர் அண்ணா. இவ­ரு­டைய எழுத்து தமி­ழ­கத்­தில் ஒரு இயக்­க­மாக வளர்க்­கப்­பட்­டது. ஒரு­வ­ரு­டைய எழுத்தே இயக்­க­மாக உரு­வா­வது, உரு­வா­னது என்­பது தமி­ழ­கத்­தில் மட்­டுமே நிகழ்ந்த அதி­ச­யம். அந்த எழுத்­தின் இயக்­கம் இன்­றும் தொடர்­கி­றது. அண்­ணா­வி­னு­டைய எழுத்து என்­பது தமி­ழில் புதி­ய­வகை எழுத்து இயக்­கத்தை மட்­டு­மல்ல; ஒரு அர­சி­யல் இயக்­கத்­தை­யும் உரு­வாக்­கி­யது. அந்த வர­லாறு எளி­தில் அழிக்­கக்­கூ­டிய வர­லா­றாக இல்லை என்­ப­தும் உண்மை. அண்­ணா­வி­னு­டைய எழுத்து தமிழ் மொழி­யில், தமிழ்ச்­ச­மூக வாழ்­வில் பெரி­ய­மாற்­றத்தை உரு­வாக்­கி­யது. அவ­ரு­டைய எழுத்­தின் தாக்­கம் இன்­றும் இருக்­கி­றது.
அண்­ணா­வுக்கு மேடைப் பேச்­சா­ளர், அர­சி­யல் தலை­வர், நாடக ஆசி­ரி­யர் என்று பல­மு­கங்­கள் உண்டு. மற்ற முகங்­க­ளை­விட சிறு­கதை ஆசி­ரி­யர் என்ற முகம் மிக­வும் முக்­கி­ய­மா­னது. 1934 முதல் 1966 வரை­யி­லான காலத்­தில் அவர் மொத்­தம் நூற்று பதி­மூன்று சிறு­க­தை­களை எழு­தி­யுள்­ளார். 11.12.1934இல் வெளி­வந்த ‘கொக்­க­ரக்கோ’ என்­பது அவ­ரு­டையமுதல் சிறு­கதை. 14.01. 1966இல் வெளி­வந்த ‘பொங்­கல்பரிசு’ என்­பது அவ­ரு­டைய கடைசி சிறு­கதை. ‘கொக்­க­ரக்கோ’ என்­பதுதமிழ்ப் பண்­பாட்­டில், கலாச்­சா­ரத்­தில், நம்­பிக்­கையை மையப்ப­டுத்­து­வது. ‘பொங்­கல் பரிசு’ என்­பது மகிழ்ச்­சியை, ஆனந்­தத்தை, கொண்­டாட்­டத்தை, நிறைவை மையப்­ப­டுத்­து­வது. அண்ணா தன்­னு­டைய சிறு­க­தை களை கொக்­க­ரக்­கோ­வில் ஆரம்­பித்து பொங்­கல் பரி­சில் முடித்­துள்­ளார்.
இந்த ஒற்­றுமை இயற்­கை­யாக அமைந்த ஆச்­ச­ரி­யம், தமிழ்ச் சமூ­கத்தை இருட்­டி­லி­ருந்து வெளிச்­சத்­திற்­குக் கொண்­டு­வர வேண்­டும் என்­பது அவ­ரு­டைய நோக்­கம். அந்த நோக்­கத்­திற்­கா­கத்­தான் அவர் எழு­தி­னார். கறுப்­பி­னப் போராளி மார்ட்­டின் லூதர்­கிங் ‘எனக்­கொரு கனவு இருக்­கி­றது’ என்று சொன்­ன­து­போல ‘எனக்­கொரு நோக்­கம் இருக்­கி­றது, லட்­சி­யம் இருக்­கி­றது’ என்று அண்ணா சொன்­னார். அவ­ரு­டைய நோக்­க­மும், கன­வும் சமூ­கத்­தில் நில­வும் ஏற்­றத்­தாழ்­வான முரண்­பாட்டை ஒழிப்­பது தொடர்­பா­னது. வாழ்­விற்­கான உரி­மை­யை­யும், அதற்­கான வேட்­கை­யை­யும் முன்­னி­றுத்­து­வதே அவ­ரு­டைய நோக்­கம், லட்­சி­யம். தமிழ்ச் சமூ­கம் மகிழ்ச்­சியை, கொண்­டாட்­டத்தை இழந்­த­தற்­கான கார­ணங்­கள் என்ன, அவற்றை அடை­வ­தற்­கான வழி­வ­கை­கள் என்ன என்று ஆராய்­வ­து­தான் அவ­ரு­டைய சிறு­க­தை­க­ளின் மைய­மான நோக்­கம். ஒரு எழுத்­தா­ள­னு­டைய நோக்­கம்­தான் அவன் எழுத்­துக்கு வலி­மை­யாக அமை­கி­றது.இந்த வலி­மை­தான் எழுத்­தி­னு­டைய மேன்­மை­யா­க­வும், எழுத்­தா­ள­னு­டைய மேன்­மை­யா­க­வும் அமை­கி­றது. அரை நூற்­றாண்டு காலம் முடிந்­து­விட்ட பிற­கும், அண்­ணா­வி­னு­டைய சிறு­க­தை­க­ளைப் பற்றி பேசு­வ­தற்­குக் கார­ணம் அக்­க­தை­க­ளி­னு­டைய வலி­மை­யும், மேன்­மை­யும்­தான்.
ஒரு எழுத்­தா­ள­னு­டைய மொத்த படைப்­பு­க­ளை­யும் படித்து பிறகு யோசிக்­கும்­போது நம்­மு­டைய நினை­வில் பத்து, இரு­பது கதை­கள் நினை­வில் நின்­றாலே பெரிய விஷ­யம். இது நம்­மால் பெரி­ய­பெ­ரிய எழுத்­தா­ளர்­கள் என்று போற்­றப்­ப­டு­ப­வர்­க­ளு­டைய எழுத்­துக்­கும்­கூட இந்த நிலை­மை­தான். ஆனால் அண்­ணா­வி­னு­டைய சிறு­க­தை­கள் இதற்கு நேர்­மா­றான குணத்­தைக் கொண்­டி­ருக்­கின்­றன. அரை­நூற்­றாண்டு காலத்­திற்கு மேலா­கி­யும் அவ­ரு­டைய கதை­க­ளைப் படிக்க முடி­கி­றது, ரசிக்க முடி­கி­றது என்­ப­தோடு அக்­க­தை­கள் இக்­கா­லத்­திற்­கும் பொருத்­த­மா­ன­தாக, தேவை­யா­ன­தாக இருக்­கி­றது என்­பது ஆச்­ச­ரி­ய­மான விஷ­யம். சரா­சரி சம்­பவ நிகழ்­வைப் பதிவு செய்­தி­ருந்­தால் ஒரு கதை­சொல்­லி­யின் வேலையை மட்­டுமே செய்து, அதி­லேயே திருப்தி அடைந்­தி­ருந்­தால் அவ­ரு­டைய கதை­கள் இன்று பேசு­பொ­ரு­ளாக இருந்­தி­ருக்­காது.
அண்ணா எழுத ஆரம்­பித்த காலத்­தி­லும், எழு­திக்­கொண்­டி­ருந்த காலத்­தி­லும் நான்­கு­வி­த­மான கதை எழு­தும் போக்­கு­கள் இருந்­தன. தனி­ம­னி­தப் பிரச்­சி­னை­கள், சிக்­கல்­கள், பிடுங்­கல்­கள், மனப்­போ­ராட்­டங்­கள், உள­வி­யல் பிரச்­சி­னை­கள், குடும்ப உற­வு­க­ளுக்­கி­டை­யி­லான மோதல்­கள், சிடுக்­கு­கள், விரக்தி, நம்­பிக்­கை­யின்மை, மனக்­கு­ழப்­பங்­களை, சீர்­கு­லை­வு­க­ளைப் பதிவு செய்­வது என்று ஒரு பிரி­வி­னர் இருந்­த­னர். இவ்­வ­கை­யான எழுத்­து­க­ளையே இலக்­கி­ய­மாக இலக்­கி­ய­வா­தி­கள் அங்­கீ­கா­ரம் செய்­த­னர்.
தனி­ம­னித பிரச்­சி­னை­க­ளை­யும் சமூ­கப் பிரச்­சி­னை­ க­ளை­யும் பதிவு செய்­வ­து­தான் எழுத்­தா­ள­னின் வேலை. அதில் குறுக்­கீடு செய்­வதோ, விமர்­ச­னம் செய்­வதோ அல்ல என்­பது மற்­றொரு பிரி­வி­னர்­க­ளு­டைய எழுத்­துப் போக்கு. மது விலக்கு, தீண்­டாமை, கதர்­இ­யக்­கம், நாட்­டுப்­பற்று, விடு­த­லைப் போராட்­டம், தேசிய இயக்­கம், காந்­தியசிந்­த­னை­க­ளின் அடிப்­ப­டை­யில் எழு­து­வது போன்­றவை மூன்­றா­வது பிரி­வி­ன­ரு­டைய எழுத்து வகை. நடை­முறை சமூ­க­வாழ்­வில் இருக்­கக்­கூ­டிய அச­லான பிரச்­சி­னை­க­ளை­யும், பிரச்­சி­னை­ க­ளுக்­கான கார­ணங்­க­ளை­யும், அதற்­கான தீர்­வு­க­ளை­யும் முன் வைத்து எழு­தி­ய­வர்­கள் பலர். அண்ணா நான்­கா­வது வகை­யைச் சார்ந்­த­வர்.
அண்­ணா­வி­னு­டைய சிறு­க­தை­க­ளின் மைய­மாக இருப்­ப­து-­­மூ­ட­நம்­பிக்­கை­க­ளுக்கு எதி­ரான கருத்­துப் பிரச்­சா­ரம், சாதிப் பிரச்­சி­னை­க­ளுக்கு, மத மோதல்­க­ளுக்கு, சம­யப் பூசல்­க­ளுக்கு, புராண இதி­கா­சக் கட்­டுக்­க­தை­க­ளுக்கு, பெண்­ணு­ரிமை, வர­தட்­ச­ணை­கொ­டு­மைக்கு, குருட்­டுத்த­னத்­திற்கு, பழ­மைக்கு, சமூ­கத்­தின் மேல் அடுக்­கில் இருப்­ப­வர்­கள் சமூ­கத்­தின் கீழ் அடுக்­கில் இருப்­ப­வர்­கள் மீது செலுத்­திய குரூ­ர­மான ஒடுக்­கு­மு­றைக்கு, சித்­தி­ர­வ­தைக்கு எதி­ரான கருத்­துத்­தான்.
அவ­ரு­டைய மொத்த கதை­க­ளின் சார­மும், நோக்­க­மும் சமூக மேம்­பாடு, முன்­னேற்­றம். சமூ­கத்­தில் விழிப்­பு­ணர்ச்­சியை ஏற்­ப­டுத்­து­வ­து­தான். சமூ­கப்­பி­ரச்­னை­களை அண்ணா 113 சிறு­க­தை­க­ளின் மூலம்­அ­லசி ஆராய்ந்­தார் என்று சொல்­வ­து­தான் சரி­யாக இருக்­கும். அண்ணா தமிழ்­ம­ர­பின் பிர­தி­நிதி. தமிழ் வாழ்வு குறித்த மதிப்­பீ­டு­களே அவ­ரு­டைய கதை­கள். சமூ­கத்தை முன்­னேற்­று­வ­தற்கு, விமர்­ச­னம் செய்­வ­தற்கு, பிரச்­சா­ரம் செய்­வ­தற்­கான கரு­வி­யா­கக் கலைப்­ப­டைப்­பு­க­ளைக் கரு­தி­னார். இலக்­கி­யம் மக்­க­ளுக்­கா­னது, அது மக்­க­ளைச் சென்று சேர­வேண்­டும் என்­ப­தி­லும் உறு­தி­யாக இருந்­தார். அத­னால் தன்­னு­டைய கருத்தை, சிந்­த­னையை, எண்­ணத்­தைப் பரப்­பு­வ­தற்­குத் தகுந்த ஆயு­த­மா­கச் சிறு­கதை என்ற வடி­வத்­தைப் பயன்­ப­டுத்­தி­னார்.
சமூ­கத்­தின் மீதான தன்­னு­டைய விமர்­ச­னத்தை சிறு­க­தை­க­ளின் வழியே செய்­தார். தேவை­யான இடங்­க­ளில் தன்­னு­டைய விமர்­ச­னத்­தைக் கடு­மை­யா­க­வும் வைத்­தார். அவ­ரு­டைய சிறு­க­தை­க­ளின் நோக்­கமே சமூ­கத்­தி­னு­டைய நியாய அநி­யா­யங்­களை விமர்­சிப்­ப­தும், விவா­திப்­ப­தும்­தான். அவர் வாழ்வை நான்கு சுவர்­க­ளுக்­குள் காண­வில்லை. மாறா­கத் தெரு­வில் கண்­டார். தன்­னைச் சுற்­றி­யி­ருந்த சமூக வாழ்­வின் ஊடா­கப் பய­ணம் செய்­த­தின் விளை­வா­க­வும், வர­லாற்­றின் அடிப்­ப­டை­யி­லி­ருந்­தும், கோட்­பாட்­டின் அடிப்­ப­டை­யி­லி­ருந்­தும் உரு­வா­ன­து­தான் அண்­ணா­வி­னு­டைய 113 சிறு­க­தை­க­ளும்.
மூட நம்­பிக்­கை­க­ளுக்கு எதி­ரா­கப் ‘பரிசு’ என்ற கதை­யை­யும், சாதி­கள் இந்த மண்­ணில் எவ்­வ­ளவு ஆழ­மாக வேர் ஊன்­றி­யி­ருக்­கி­றது என்­ப­தற்கு ‘சிங்­கள சீமாட்டி’ (1939) என்ற கதை­யை­யும், மதப்­பூ­சல்­க­ளுக்கு எதி­ராக ‘மது­ரைக்கு டிக்­கட் இல்லை’ (4.3.1945) என்ற கதை­யை­யும், பேய் பிசாசு போன்ற கட்­டுக்­க­தை­க­ளுக்கு எதி­ராக ‘யார் மீது கோபித்­துக் கொள்­வது’ (30.1.1955) என்ற கதை­யை­யும், மாந்திரீகத்­தி­னால் ஏற்­ப­டும் கேடு­க­ளுக்­கு­ எ­தி­ராக ‘விழுப்­பு­ரம் சந்­திப்பு’ (14.1.1965) என்ற கதை­யை­யும் எழு­தி­யுள்­ளார்.
முத­லா­ளித்­து­வத்­தின் சுரண்­டல் போக்­கு­களை, கோரச் செயல்­பா­டு­களை பல்­வேறு நிலை­க­ளி­லி­ருந்துஆராய்ந்து ‘செவ்­வாழை’ (1.15.1949), ‘ரொட்­டித் துண்டு’, ‘பக்த பக்­காத் திரு­டன்’ (11.6.1950), ‘பூப­தி­யின் ஒரு நாள் அலு­வல்’ (7.7.1946), ‘பொய்-­­லாப நஷ்­டம்’ (18.11.1945), ‘நாடோடி’ (17.11.1945), ‘உடை­யார் உள்­ளம்’ (14,01. 1966) என்ற சிறு­க­தை­க­ளை­யும் எழு­தி­யுள்­ளார். இந்த நாட்­டில் வர­தட்­சணை கொடு­மை­யி­னால் எத்­தனை பெண்­க­ளு­டைய வாழ்க்கை சீர்­கெட்­டுப் போகி­றது என்­ப­தற்கு ஒரு உதா­ர­ண­மாக ‘சோணாச்­ச­லம்’ (20.09. 1947) என்ற கதையை எழு­தி­யுள்­ளார். பெண்­க­ளும் மனித உயிர்­களே, அவர்­க­ளுக்­கும் சகல உரி­மை­க­ளோடு வாழ்­வ­தற்கு உரிமை உண்டு என்­ப­தோடு பெண்­கள் படும் அல்­லல்­களை, துன்­பங்­களை விவ­ரிக்­கும் வித­மாக ‘வாலிப விருந்து’, ‘சுடு­மூஞ்சி’ (3.2.1946), ‘கன்னி வித­வை­யா­னாள்’ (14.1.1961) ஆகிய கதை­க­ளை­யும் எழு­தி­யுள்­ளார்.
சகல வித­மான மூடத்­த­னங்­க­ளுக்­கும், சம­யப்­பூ­சல்­க­ளுக்­கும், ஏமாற்று வேலை­க­ளுக்­கும், கட்­டுக்­க­தை­க­ளுக்­கும், கீழ்­மைத் தனங்­க­ளுக்­கும், மோசடி கபட நாட­கங்­க­ளுக்­கும் பிரா­ம­ணி­யமே அடிப்­ப­டை­யான கார­ணம் என்­ப­தைத் தோலு­ரித்து காட்­டும் வித­மாக ‘அறு­வடை’ (14.1.1955), ‘பேரன் பெங்­க­ளு­ரில்’, ‘மேல­தி­காரி’ (15.1. 1956), ‘சொல்­வதை எழு­தேண்டா’ (24.2.1946) ஆகிய சிறு­க­தை­களை எழு­தி­யுள்­ளார். காதல் என்ற பெய­ரால் நடக்­கும் மோச­டிக்­கும், கபட நாட­கத்­திற்­கும் ஆளாகி அவ­திப்­ப­டும் பெண்­க­ளு­டைய வாழ்வை சித்­த­ரிக்­கும் வித­மாக ‘தங்­கத்­தின் காத­லன்’ (1939), ‘புரோ­கி­த­னின் புலம்­பல்’, ‘அவள் மிகப் பொல்­லா­த­வள்’ (18.6. 1939), போன்ற கதை­களை எழு­தி­யுள்­ளார். இக்­க­தை­க­ளில் வரக்­கூ­டிய மோகனா, ஏம­லதா, சரசா போன்ற பெண்­க­ளு­டைய வாழ்க்கை சீர்­கெட்­டது போல இன்­றும் காதல் என்ற கபட நாட­கத்­தால் அல்­ல­லு­றும் எத்­த­னையோ பெண்­க­ளு­டைய வாழ்க்­கையை நாம் பார்க்­கவே செய்­கி­றோம்.
ஏழை­க­ளின் மீதான பணக்­கா­ரர்­க­ளு­டைய அன்பு, இரக்­கம் பச்­சா­தா­பம் என்­ப­தெல்­லாம் நாட­கமே என்­பதை ‘இரு பரம்­ப­ரை­கள்’ (6.1.1946) என்ற கதை­யில் காண முடி­யும். பெண்­க­ளு­டைய உரி­மைக்­கா­க­வும், வாழ்­விற்­கா­க­வும் குரல் கொடுப்­ப­தோடு பெண்­ணிய நோக்­கில் ‘அவள் விபச்­சா­ரி­யா­னாள்’(7.11.1946), ‘வழுக்கி விழுந்­த­வள்’ (14.01.1965) ஆகிய கதை­க­ளை­யும் எழு­தி­யுள்­ளார்.
அண்­ணா­வி­னு­டைய சிறு­க­தை­கள் நடை­முறை வாழ்­வி­யல் சிக்­கல்­கள், பிரச்­சி­னை­களை மட்­டும்­தான் உரத்­தக் குர­லில் பேசும் என்­ப­தில்லை. வர­லா­று­க­ளை­யும், வர­லாற்­றில் நடந்­துள்ள மோச­டி ­க­ளை­யும், ஏமாற்று சித்து வேலை­க­ளை­யும் தர்க்­கப்­பூர்­வ­மாக ஆரா­யும் என்­ப­தற்கு ‘புலி­ந­கம்’ (20.1.1946), ‘பிடி சாம்­பல்’ (18.5.1947), ‘திரு­மலை கண்ட திவ்­விய ஜோதி’ (13.1.1952), ‘தஞ்­சை­யின் வீழ்ச்சி’, ‘வெளி­யூ­ரில் கொலம்­பசு’ போன்ற கதை­களை உதா­ர­ண­மா­கச் சொல்­ல­லாம்.
வர­லாற்று அறிவு மட்­டு­மல்ல, சமூ­கத்­தில் அன்­றா­டம் நடக்­கும் நிகழ்ச்­சி­கள், சம்­ப­வங்­கள் குறித்து அறி­வும் தெளி­வும் அண்­ணா­வுக்கு இருந்­தது என்­ப­தற்­குச் செய்­தித் தாள்­க­ளில் வந்த விஷ­யங்­களை வைத்தே ‘மான­நஷ்ட வழக்கு’, ‘ஒரு­வன்­தான் பிடி­பட்­டான்’, ‘சம­ய­பு­ரத்­தம்­மன்’ ஆகிய கதை­களை எழு­தி­யுள்­ளதே சாட்சி, அண்­ணா­வி­னு­டைய 113 சிறு­க­தை­க­ளை­யும் படித்து முடித்த பிறகு அவ­ரு­டைய பரந்­து­பட்ட அறிவு வீச்சு நம்மை வியப்­பில் ஆழ்த்­து­கி­றது. அதோடு அவர் தொடாத விஷ­யங்­கள் என்று எது­வு­மில்லை என்­ப­தும், ஒரு கதை­யி­னு­டைய சாயலை மற்­றொரு கதை­யில் காண முடி­யாது என்­ப­தும், அவ­ரு­டைய எழுத்­தின் மேன்­மைக்­குச் சான்று.
அண்­ணா­வின் சிறு­க­தை­க­ளி­னு­டைய கரு, அமைப்பு, நோக்­கம், உள்­ள­டக்­கம், வெளிப்­பாட்­டுத் திறன், ஆளுமை, மொழி போன்­ற­வற்றை வைத்து மூன்று வகை­க­ளா­கப் பிரிக்க முடி­யும். அது தொடக்­க­கா­லச் சிறு­க­தை­கள், இடைக்­கா­லச் சிறு­க­தை­கள், கடை­சிக்­கா­லச் சிறு­க­தை­கள், தொடக்­க­கா­லக் கதை­க­ளில் பசி, வறுமை, நோய், அறி­யாமை, சாதி மற்­றும் பொரு­ளா­தார ஏற்­றத்­தாழ்­வு­கள், உழைப்­புச் சுரண்­டல்­கள் போன்ற பிரச்­னை­களை நேரி­டை­யா­க­வும், அப்­பட்­ட­மா­க­வும் பேசி­ய­தோடு அதற்­கா­னத் தீர்­வு­க­ளை­யும் முன் வைத்­தார்.
பொது­வாக தமிழ் இலக்­கிய உல­கம் பிரச்­சி­னை ­க­ளை­யும், பிரச்­சி­னை­கள் உரு­வா­வ­தற்­கான கார­ணி­க­ளை­யும் ஆரா­யும். ஆனா­லும் முடிவை வாச­க­னு­டைய தீர்­மா­னத்­திற்கு விட்­டு­வி­டும். இதற்கு நேர்­மா­றான குணத்தை அண்­ணா­வி­னு­டைய தொடக்­க­கா­லக் கதை­கள் கொண்­டி­ருந்­தன. இந்­நி­லைப்­பாட்டை கதைக்­குச் சாத­க­மா­க­வும் கொள்ள முடி­யும், பாத­க­மா­க­வும் கொள்ள முடி­யும். இடைக்­கா­லக் கதை­கள் பிரச்­சி­னை ­களை விரி­வா­க­வும் ஆழ­மா­க­வும் ஆராய்ந்­தது.இக்­க­தை­கள் தீர்வை, முடிவை முன்­வைப்­ப­தற்­குப் பதி­லாக விவா­தத்­தை­யும் தர்க்­கத்­தை­யும் முன்­வைத்­தன. கடை­சிக்­கா­லக் கதை­க­ளில் கரு­வுக்கு மட்­டும் முக்­கி­யத்­து­வம் தரா­மல் வடி­வம், செய்­நேர்த்தி, சொல்­முறை, நுட்­பம், செறிவு ஆகி­ய­வற்­றிற்கு முக்­கி­யத்­து­வம் கொடுத்­தி­ருக்­கி­றார்.கடை­சிக்­கால கதை­க­ளில்­தான் அண்ணா உள­வி­யல் சார்ந்த கதை­க­ளான ‘ராஜ­பார்ட் ரங்­கத்­துரை பாக­வ­தத்’ (6.6.1948), ‘மரத்­துண்டு’ போன்­ற­வற்றை எழு­தி­னார். இக்­கா­லத்­தில்­தான் அவர், ‘பேய் ஓடிப்­போச்சி’ (31.8.1947), ‘சாது’ (16.11.1947) போன்று உரு­வ­கக் கதை­க­ளை­யும் எழு­தி­னார். இக்­க­தை­க­ளில் முதிர்ச்­சி­யை­யும், தேர்ச்­சி­யை­யும் காண முடி­யும். இதே காலத்­தில்­தான் அவர் பாத்­தி­ரச் சித்­த­ரிப்­புக்கு ‘உப­காரி உல­க­நா­தன்’ (26.7. 1964), ‘பித்­த­ளை­யல்ல பொன்­னே­தான்’ (14.1.1965), ‘சுமார் சுப்­பையா’ (14.1.1965), ‘சொக்கி’ (13.6.1965), ‘உடை போட்­ட­தும்’ (14.1.1965) போன்ற கதை­க­ளை­யும் எழு­தி­யுள்­ளார். ஒப்­பீட்டு முறை­யி­லான கதை­க­ளை­யும் எழு­தி­யுள்­ளார். ஒரு எழுத்­தா­ள­னு­டைய வாழ்க்­கை­யில் வளர்ச்­சிப் படி­நி­லை­கள் தவிர்க்க முடி­யா­தவை. இந்த வளர்ச்­சிப் படி­நி­லை­கள்­தான் ஒரு எழுத்­தா­ள­னு­டைய எழுத்­தின் வலி­மை­யைக் காட்­டும்.
அண்­ணா­வி­னு­டைய சிறு­க­தை­கள் எல்­லாமே அவ­ரு­டைய இயக்க செயற்­பா­டு­க­ளில் ஒன்­றா­கத்­தான் இருந்­தது. அவ­ரு­டைய அர­சி­யல் பார்­வை­தான் சமூ­கத்­தைக் கூர்ந்து பார்க்க வைத்­தது. அத­னால் தான் அவ­ரு­டைய எழுத்து உல­கம் பரந்து விரிந்­த­தா­க­வும் இருந்­தது. அத­னால்­தான் அவ­ரு­டைய சிறு­க­தை­கள் தின­சரி வாழ்க்­கை­யின் நிகழ்­வு­க­ளால் நிரம்­பி­ய­தாக - அன்­றாட வாழ்க்­கை­யின் பிர­தி­ப­லிப்­பாக இருந்­தது. காலத்­தின் பதி­வா­க­வும் இருந்­தது.
அண்­ணா­வி­னு­டைய சிறு­க­தை­கள் பிரச்­சா­ ரத்­திற்­காக எழு­தப்­பட்­டி­ருந்­தா­லும் அவ­ரு­டைய சிறு­க­தை­கள் -சிறு­க­தை­க­ளுக்­கு­ரிய எல்­லாக் குணத்­தை­யும் கொண்­டி­ருந்­தன என்­பதை மறுக்­க­மு­டி­யாது: தெளி­வான நடை, குறிப்­பாக உணர்த்­து­தல், நுட்­ப­மா­கச் சித்­த­ரித்­தல், எள்­ளல், அங்­க­தம், ஒப்­பீடு, நகைச்­சுவை,உரு­வ­கம், கவி­தைக் குணம் கொண்ட வாக்­கி­ய­மைப்­பு­கள் என்று அனைத்­துக் கூறு­க­ளும் நிறைந்­தி­ருப்­ப­தைக் காண முடி­யும். அதே நேரத்­தில் திரித்­துக் கூறு­தல், சுற்றி வளைத்­துப் பேசு­தல் என்­பது அவ­ரு­டைய சிறு­க­தை­க­ளில் காண முடி­யாத ஒன்று. சிறு­க­தை­க­ளில் சோதனை முயற்­சி­யாக கற்­ப­னைச் சித்­தி­ரம் என்ற வடி­வில், படிப்­ப­வர்­க­ளுக்கு அயர்ச்சி ஏற்­ப­டா­த­வாறு பிரார்த்­தனை (14.3.1943), வள்­ளித் திரு­ம­ணம் (28.3.1943), பிர­சங்க, பூஷ­ணம்’ (4.2.1945), வேலைப் போச்சு (17.2.1946), நாட்­டில் காடு (2.3.1947) ஆகிய கதை­க­ளை­யும் எழு­தி­னார்.
பழைய மர­பு­களை உத­றித்­தள்ளி புதிய மர­பு­களை உரு­வாக்­கிய சிறு­க­தை­கள் அண்­ணா­வி­னு­டை­யது. பிற­ரால் எளி­தில் பின்­பற்ற முடி­யாத நடை அவ­ரு­டை­யது. சிறு­க­தைக்­கு­ரிய எல்லா குணங்­க­ளும் சிறப்­பாக இருந்­தும் நம்­மு­டைய ஆச்­சா­ர­மான இலக்­கிய விமர்­ச­கர்­கள் அண்­ணா­வி­னு­டைய சிறு­க­தை­களை கொள்கை முழக்­கங்­க­ளாக மட்­டுமே பார்த்­தார்­கள். நம்­மு­டைய விமர்­ச­கர்­கள் ஒரு படைப்பை அத­னு­டைய தரத்தை வைத்து மதிப்­பி­டா­மல் அந்­தப் படைப்பை எழு­திய எழுத்­தா­ள­னு­டைய சாதி, அவன் சார்ந்­துள்ள கட்சி, அவ­னு­டைய பின்­னணி போன்­ற­வற்றை வைத்தே மதிப்­பி­டு­கி­றார்­கள். இப்­ப­டிச் செய்­வ­தற்­குப் பெயர்இலக்­கிய விமர்­ச­னம் அல்ல. இக்­கொ­டுமை அண்­ணா­வி­னு­டைய சிறு­க­தை­ க­ளுக்­கும் நேர்ந்­தது. புகழ்ச்­சி­யை­யும், இகழ்ச்­சி­யை­யும் தாண்டி அவ­ரு­டைய கதை­கள் இன்­றும் பேசப்­ப­டு­வ­தற்­குக் கார­ணம் அக்­க­தை­க­ளி­னு­டைய பலம்­தான். தனி­ம­னித துக்­கத்தை, சிக்­கல்­களை, பிரச்­சி­னை­களை அண்ணா எழு­த­வில்லை, இது­தான் அவ­ருக்­கும் மற்ற எழுத்­தா­ளர்­க­ளுக்­கு­முள்ள வேறு­பாடு. சமூ­கக் கொடு­மை­க­ளுக்கு எதி­ரா­னது அவ­ரு­டைய சிறு­க­தை­கள். அக்­க­தை­கள் சரா­ச­ரி­யான கதை­க­ளாக இல்­லா­மல் கல­கக் குர­லாக இருந்­தது. முதல் கதை­யி­லி­ருந்து கடைசி கதை வரை அவ­ரு­டைய கல­கக் குரல் ஒலித்­துக்­கொண்டே இருந்­தது. ஏனென்­றால் வாழ்­வி­னு­டைய நெருக்­க­டி­யி­லி­ருந்து, சமூ­கத்­தி­னு­டைய நெருக்­க­டி­யி­லி­ருந்து உரு­வா­னது அவ­ரு­டைய சிறு­க­தை­கள்.
எழுத்­தா­ள­னுக்­கும், சமூ­கத்­திற்­கு­மான உறவு என்ன? ஒரு எழுத்­தா­ளன் அவன் வாழ்­கிற காலத்­தில் செய்ய வேண்­டிய பணி­கள் என்ன என்ற கேள்­வி­க­ளுக்கு அண்­ணா­வி­னு­டைய சிறு­க­தை­க­ளில் பதில் இருக்­கி­றது. அவ­ருக்­குத் தெளி­வான நோக்­கம் இருந்­தது. அந்த நோக்­கத்­தி­லி­ருந்­தும் லட்­சி­யத்­தி­லி­ருந்­தும் தான் அவ­ரு­டைய சிறு­க­தை­கள் உருப்­பெற்று வந்­தன. நோக்­க­மில்­லா­மல், குறிக்­கோள் இல்­லா­மல் எழு­தப்­ப­டு­கிற இலக்­கி­யப் படைப்­பு­க­ளுக்கு சமூ­கத்­தில் என்ன மதிப்புஇருக்க முடி­யும்? இந்­நி­லை­யி­லி­ருந்­து­தான் அண்­ணா­வி­னு­டைய சிறு­க­தை­களை மதிப்­பிட வேண்­டும்.
அண்ணா எந்­தெந்­தப் பிரச்­சி­னை­கள் தீர வேண்­டும், ஒழிக்­கப்­பட்ட வேண்­டும் என்று எழு­தி­னாரோ அந்­தப் பிரச்­சி­னை­கள் இன்­று­வரை ஒழிந்­த­பா­டில்லை. சாதிக் கொடுமை, தீண்­டாமை, பசி, பிணி, வறுமை, அறி­யாமை, பொய்மை, போலித்­த­னம், சம­யப்­பூ­சல், இளமை மணம், காத­லுக்­குத் தடை, தெய்­வத்­தின் பெய­ரால் ஏற்­பட்ட கட்­டுக்­க­தை­கள், புராண, இதி­காச புரட்­டு­கள் போன்ற பிரச்­சி­னை­கள் இந்த மண்­ணில் இருக்­கும் வரை - வைதீ­கச்­சூழ்ச்­சி­யின் பிடி­யில் தமிழ்ச்சமூ­கம் சிக்­கித் தவிக்­கும் வரை­யில் ச­மூ­கத்­தைச்சீர்­கு­லைக்­கக்­கூ­டிய பிரச்­சி­னை­கள் இருக்­கும்­வரை - அண்­ணா­வி­னு­டைய சிறு­க­தை­க­ளும் இருக்­கும். 

Comments

❤️பின் தொடரும் நட்புறவுகள்

#tamilstories #tamil #tamilstorytelling #tamilsurvivalstories #tamilstory #tamilnovel #tamilshortstories #ponniyinselvan #ponniyinselvanlovers #vanthiyadevan #ponniyinselvanmemes #adityakarikalan #kannadasan #balakumaran #sirukathai #tamilstoryteller #tamilbooks #namuthukumar #story #tamilbooklovers #tamilovebgm #tamilpoetry #tamilstories #maan #tamilquotes #tamilmotivation #wattpadstories #gurmeetchoudhary #tamilkavithai #hotnessoverload #geet #romanticcouple #tamilpoetry #kavithai #maaneet #kavithaigal #tamilpoem #maansinghkhurana #tamilromance #hottestcouple #officeromance #tamilwriters #gurti #bedtimestories #kadhaigal #tamilquotes #love #bookstamil #ps #lovestatustamil #lovestory #tamilmemes #writeraswin #tamillove #samantha #tamilbookmemes #skids #goundamani #moralstories #tamilmotivation #tamilstatus #wattpadstories #tamilromance #geethanda #tamilstories #romance #story #chennai #lovestory #stories #srilanka #tamil #wattpad #tamilstatus #storytime #tamilsongs #tamillove #tamillyrics #bestcouple #maan #tamilquotes #tamilmotivation #wattpadstories #gurmeetchoudhary #tamilkavithai #maaneetians #ghsp #ponniyinselvanbook #tamilkavithai #tamilwriters #tamilcartoon #tamilstorybooks #storiesforkids #wattpad #tamilliterature #geetmaansinghkhurana #tamilbookstagram #tamilwriter #tenali #aswintamilstories #shortstory #sivagamiyinsabadham tamil short stories tamil stories tamil kathai tamil short story tamil kadhaigal tamil blog stories motivational tamil stories inspirational tamil stories moral stories in tamil life stories in tamil. love stories in tamil friendship stories in tamil family stories in tamil village stories in tamil best tamil short stories real life tamil stories.emotional tamil stories,heart touching tamil stories meaningful tamil stories small stories in tamil tamil blog tamil literature tamil writing tamil content tamil readers tamil storytelling. தமிழ் சிறுகதை,தமிழ் கதைகள்,சிறுகதைகள் ,வாழ்க்கை கதைகள் உந்துதல் கதைகள்.